13:31

இசையுடன் என் முதல் பயணம்

Posted by மதியின் வலையில்

வலையுலகத்தில் எனக்கு சக பதிவர்களுடன் அவ்வளவாக (இல்லை இல்லை, எவருடனும் ) பழக்கம் இல்லை. ஆனால் நிறைய நண்பர்களுடைய பதிவினை தொடர்ந்து படிப்பேன். ஒவ்வொருவருடைய பதிவிலும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பு இருக்கும். இப்படி இருக்க, சமீப காலமாக எனக்கும் வலையுலகத்தில் தோன்றியவற்றை பதிவிடலாம் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் எதைப்பற்றி எழுதுவது???

இப்படி சிந்தித்து சிந்தித்து, சில திங்கள்கள் கழித்து இன்று தான் இந்த தலைப்பு எனக்கு தோன்றியது. உடனே ஏன் காலந்தாமதிக்க வேண்டுமென்று, இன்றிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன். ஆரம்பித்துவிட்டேன்.

குறிப்பு : எனது முதல் பதிவு இது. ஏதேனும் குறைகள் இருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் மூலமாகவோ இல்லை பின்னூட்டம் மூலமாகவோ தெரிவியுங்கள். நன்றி.

[source : wikipedia]

"இசையுடன் எனது முதல் பயணம்" - தலைப்பை பார்த்து ஏதும் தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். எனக்கு இசையை பற்றி ஒன்றும் தெரியாது ("பின்னே எதுக்கு இதைபத்தி எழுதுற" - இப்படி யாரோ யோசிக்குறது கேட்குது. எனக்கு வேற தலைப்பு தெரியலையே. ) எனக்கு இசையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் ஆவலை தவிர பயிற்சி ஏதும் இல்லை.

இப்படி இருக்க இசையை ஏன் தேர்ந்தெடுத்தேன்? அது ஒரு சின்ன கதை. (யாரும் தூங்கிடதீங்க. தயவு செய்து முழுதும் படித்துவிட்டு அப்புறம் போய் தூங்கலாம்)

சிறு குழந்தையிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்டால்.......

(1). மருத்துவராக வேண்டும் - (உடல்நிலை சரியில்லை-னா மருத்துவரிடம் ஊசி போடுவார்கள். அதனால் இவர்கள் பெரியவர்களாகி எல்லோருக்கும் ஊசி போடுவார்களாம். )
(2). ஆசிரியராக வேண்டும் - இதற்கான காரணம் உங்கள் அனைவருக்கும் அறிந்ததே... நீங்களே இப்படி நினைத்திருக்கலாம். :)

இதுபோல் பலவற்றை கூறிக்கொண்டே இருப்பார்கள். பொறியாளராக, சைக்கிள் பழுதுபாற்பவராக, ஆட்டோ ஓட்டுனராக, ஆராய்ச்சியாளராக... இப்படி பல உண்டு....

சரி, சிறுவயதில் அறியாமை காரணமாக இப்படி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதோ அரை ஆயுள் முடிந்துவிட்டது. ஏதேனும் ஆசை எனதுள்ளும் எழுந்துகொண்டே இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம்.
[source : wikipedia]

ஆனால் இசையின் மேல் எழுந்த இந்த ஆசை நீண்ட நாளாக நிலைத்து விட்டது.


என்னுடைய இந்த ஆசை எங்கிருந்து ஆரம்பித்தது என்று எழுதலாம் என்றால் ஏற்கெனவே இந்த பதிவு நீண்டு விட்டது. அதனால் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் இடுகிறேன்.

[source : wikipedia]

நன்றி....

--மதி

30 comments:

ஆமினா said...

ஹா...ஹா...ஹா... முதல் பதிவே கலக்கல்... அதுவும் தொடராகவா??

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இன்னும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

ஆமினா said...

pls remove word verification :-)

மதியின் வலையில் said...

@ஆமினா

நன்றி.

என் முதல் பதிவின் முதல் பின்னூட்டம். மிக்க நன்றி.

மதியின் வலையில் said...

///ஆமினா said...
pls remove word verification :-)
///

Done. Thanks.

Mathuran said...

சிறு வயதில் எம் மனதில் தோன்றி அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் இலட்சியம் பற்றிய அழகான பதிவுடன் உங்கள் பதிவுலக பயணத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

Mathuran said...

ப்ளாக் டிசைனிங் அழகாக உள்ளது.

மதியின் வலையில் said...

@மதுரன்

சிறுவதில் உண்டான கனவுகளை நினைக்கையில் ஆச்சர்யமாகவும் சில சமயங்களில் சிரிப்பாகவும் இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மதியின் வலையில் said...

@மதுரன்
///ப்ளாக் டிசைனிங் அழகாக உள்ளது.///

நன்றி. சில பிரச்சனைகளும் உள்ளது இந்த வடிவமைப்பில். சரிசெய்யப் பார்கிறேன். இல்லையென்றால் மாற்றவேண்டி வருமோ என்ற கவலையும் உள்ளது.

Mathuran said...

ஏதாவது உதவி தேவையென்றால் கேளுங்கள்

மதியின் வலையில் said...

@ மதுரன் said...
///ஏதாவது உதவி தேவையென்றால் கேளுங்கள்///

ஆம் நண்பரே, பின்னூட்டத்தை பதிவின் கீழ் பார்க்க இயலவில்லை. comment -ஐ சொடுக்கினால் வேறு ஒரு பக்கத்தில் அனைத்தும் தெரிகிறது.

இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?

இருந்தால் கூறவும்

நன்றி.

Mathuran said...

இதற்கு டாஸ்போர்ட் சென்று அதில் Settings - Comments என்று அந்த விண்டோவில் Comment Form Placement என்பதில் Pop-up window என்பதை தெரிவு செய்துவிட்டு Save செய்யுங்கள்

மதியின் வலையில் said...

மதுரன் said...
///இதற்கு டாஸ்போர்ட் சென்று அதில் Settings - Comments என்று அந்த விண்டோவில் Comment Form Placement என்பதில் Pop-up window என்பதை தெரிவு செய்துவிட்டு Save செய்யுங்கள்///

நன்றி நண்பரே!!! இப்பொழுது அதே பக்கத்தில் பார்க்க முடிகிறது.

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

ம.தி.சுதா said...

வணக்கம் வருக வருக இருகரம் கொடுத்து அழைக்கிறோம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் மதி . உங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
வலைப் பதிவில் முதற் பதிவாக இசை பற்றி ஆரம்பித்து , ஒரு சிறு அறிமுகத்தோடு நிறுத்தி சுவாரஸ்யம் கூட்டி
அடுத்த பதிவு வரை காத்திருக்க வைத்து விட்டீர்களே!

உங்களின் வலையுலக எழுத்துப் பணி சிறப்பாக அமைய சிறியேன் நானும் வாழ்த்துகிறேன்.

சுதா SJ said...

மதி உங்கள் வலைப்பூ அலங்காரம் ரெம்ப அழகாய் இருக்கு....

சுதா SJ said...

ஆரம்பமே.... எல்லோருக்கும் பிடித்த இசையுடன் வந்திருக்கிறீர்கள்..... அதுவும் தொடராகா..... வாழ்த்துக்கள் நண்பா...

மதியின் வலையில் said...

ம.தி.சுதா♔ said...
////வணக்கம் வருக வருக இருகரம் கொடுத்து அழைக்கிறோம்... ////

நன்றி சகோதரா..

மதியின் வலையில் said...

! ❤ பனித்துளி சங்கர் ❤ !
////வாழ்த்துக்கள் மதி . உங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்////

நன்றி சங்கர்.

மதியின் வலையில் said...

நிரூபன் said...
///வணக்கம் சகோதரம்,
வலைப் பதிவில் முதற் பதிவாக இசை பற்றி ஆரம்பித்து , ஒரு சிறு அறிமுகத்தோடு நிறுத்தி சுவாரஸ்யம் கூட்டி
அடுத்த பதிவு வரை காத்திருக்க வைத்து விட்டீர்களே!

உங்களின் வலையுலக எழுத்துப் பணி சிறப்பாக அமைய சிறியேன் நானும் வாழ்த்துகிறேன்.////

நன்றி நிரூபன். சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால் நண்பர்களின் ஆதரவைப் பார்த்தவுடன் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்துவிட்டது. மிக்க நன்றி.

மதியின் வலையில் said...

@துஷ்யந்தன்
////மதி உங்கள் வலைப்பூ அலங்காரம் ரெம்ப அழகாய் இருக்கு....///

மிக்க நன்றி.

மதியின் வலையில் said...

@துஷ்யந்தன்
////ஆரம்பமே.... எல்லோருக்கும் பிடித்த இசையுடன் வந்திருக்கிறீர்கள்..... அதுவும் தொடராகா..... வாழ்த்துக்கள் நண்பா...///

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துஷ்யந்தன்.

HOTLINKSIN.COM said...

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. பதிவுலகில் உங்கள் பயணம் தொடரட்டும்...

மதியின் வலையில் said...

HOTLINKSIN.COM said...

////ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. பதிவுலகில் உங்கள் பயணம் தொடரட்டும்...///

நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் இடுகைக்கே இத்துணை பின்னூட்டங்களா? வாழ்த்துக்கள் நண்பரே.... அருமையான் துவக்கம்.... அடிச்சு ஆடுங்கள்.

மதியின் வலையில் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

////முதல் இடுகைக்கே இத்துணை பின்னூட்டங்களா? வாழ்த்துக்கள் நண்பரே.... அருமையான் துவக்கம்.... அடிச்சு ஆடுங்கள்.///
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே. இன்னும் இன்றைய எழுத வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் நேரமின்மைதான் சற்று வருத்தமாக உள்ளது. முடிந்தவரை நிறைய பதிவிட முயற்சிக்கிறேன்.

மாலதி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

மதியின் வலையில் said...

மாலதி said...

///வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்///
நன்றி மாலதி.

சித்தாரா மகேஷ். said...

வருக வருக.நல்லதொரு முயற்சி.தங்கள் முயற்சி வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்.

என் மனதை திருடிய பாடல்கள்

மதியின் வலையில் said...

சித்தாரா மகேஷ். said...
///வருக வருக.நல்லதொரு முயற்சி.தங்கள் முயற்சி வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்.///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

|Home